logo
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அமைச்சர் முருகன்  3 நாள்கள் சுற்றுப்பயணம்

ஈரோடு மாவட்டத்தில் மத்திய அமைச்சர் முருகன் 3 நாள்கள் சுற்றுப்பயணம்

17/Aug/2021 11:29:34


ஈரோடு, ஆக::ஈரோடு மாவட்டத்தில் மத்திய அமைச்சர் முருகன்  3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 சுதந்திர போராட்ட வீர்ர் பொல்லானுக்கு அரச்சலூர் அருகேயுள்ள நல்லமங்காபாளையத்தில் பொல்லானின் திருவுருவபடத்திற்கு  மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் பொல்லான் குறித்த புத்தகைத்தையும் வெளியிட்டார்.

பின்னர் அரச்சலூர் கைகாட்டி சந்திப்பில் மக்கள் ஆசி பெறும் யாத்திராவுக்கு   மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு, பா.ஜ.க எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு விழாவில்  மத்திய இணையமைச்சர் எல்.முருகன்  பேசியதாவது:  இந்திய அரசு ஏக்கலைவன் பெயரில் ராணுவ பயிற்சி பள்ளியை ஆரம்பித்துள்ளது . சுதந்திரம் பெற்ற பிறகு  12 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி.  இவர்களை அறிமுகப்படுத்த கூடாது என்பதற்காக  திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசு பல்வேறு நல்ல திட்ட செயல்படுத்தி வருகிறது.OBC பட்டியல்  எந்த ஜாதி இடம்பெற வேண்டும் என அரசியல் அமைப்பை திருத்தி சமூக நீதியை நிலைநாட்டியவர் பிரதமர் மோடி. நீங்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்றார் அமைச்சர் எல்.முருகன் 


பின்னர்  பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது:வேல் யாத்திரையின் போது தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெறாது என திமுக கூறி வந்தநிலையில் மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

திமுக பொய்யான சமூகநீதியை வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க தான் உண்மையான சமூகநீதியை வலியுறுத்தி வருகிறது என்றார் அண்ணாமலை. .பின்னர்   ஈரோடு செல்லும் வழியில் நின்றிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்த ரேசன்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி , பருப்பு வகைகளை கணக்குகளை சரிபார்த்து , அரிசியின் தரத்தினை பரிசோதித்தார்.

Top