09/Aug/2021 12:23:19
ஈரோடு, ஆக: கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஈரோடு எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா பரிசு வழங்கி பாராட்டினார்.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் கராத்தே போட்டி நடந்தது. சென்னை தலைமை பயிற்சியாளர் கோஜூ கோபி, ஈரோடு மாவட்ட கராத்தே சங்க துணைத்தலைவர் ஷேக் அலாவுதீன் பாஷா ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் 60க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர தலைவர் ஈபி ரவி, துணை தலைவர் ராஜேஷ், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், கராத்தே சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.