logo
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுசூதனன் மறைவுக்கு நிர்வாகிகள் அஞ்சலி

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுசூதனன் மறைவுக்கு நிர்வாகிகள் அஞ்சலி

07/Aug/2021 12:14:12

ஈரோடு, ஆக: ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுசூதனன் மறைவுக்கு நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நில குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவரது உருவப் படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  மாவட்ட கட்சி அலுவலகத்தில் மதுசூதனன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு,  ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ- வுமான  கே. எஸ். தென்னரசு ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மதுசூதனன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, தங்கமுத்து, ராமசாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார்,  நிர்வாகிகள் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Top