logo
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

30/Jul/2021 06:41:02

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை  மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதிற்கு விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

2021-ஆம் ஆண்டிற்கான விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மவிருதுகள் வழங்கப்படுகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு கலை, சமூகப் பணி, பொது சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அரசு குடிமைப் பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடைவர் ஆவர். 

பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் வருகின்ற    2022 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது.  

எனவே,புதுக்கோட்டை  மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணைய தள முகவரியான https://padmaawards.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  

ர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 15.9.2021 -ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டும். மேலும்  புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டுப் பிரிவு 04322-222187 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்துகொள்ளலாம். 

Top