logo
இந்திய அரசின்  ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்-ஆட்சியர் தகவல்

இந்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்-ஆட்சியர் தகவல்

30/Jul/2021 06:32:08

புதுக்கோட்டை, ஜூலை: இந்திய அரசின்  ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த தகுதியான நபர்கள்  விண்ணப்பிக்கலாம்.

 இதுகுறித்து,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.  

சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.   உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்  துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.  ஜீவன் ரக்ஷா பதக்கம் தனக்கு காயம் ஏற்படினும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.

மேற்காணும் 2021-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதிற்கான விண்ணப்பம்புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை   8.8.2021 -க்குள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும்..

மேற்கண்ட விருது தொடர்பாக இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04322-222187 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Top