logo
 ஈரோடு மாவட்டத்தில் இன்று 113 இடங்களில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் இன்று 113 இடங்களில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

23/Jul/2021 11:39:20

ஈரோடு, ஜூலை:ஈரோடு மாவட்டத்தில்  113 இடங்களில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

 ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இது வரை 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இரண்டாவது அலை தாக்கம் காரணமாக  தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 113 இடங்களில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்கள் 19 ஆயிரத்து 500 பேருக்கு செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மையங்களிலும்   டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சில மையங்களில் முதலில் வந்த 100 பேருக்கும், ஒரு சில மையங்களில் 150 பேருக்கும், தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாநகர் பகுதியில்  20 இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முதலில் வந்த 200 பேருக்கு டோக்கன் அடிப்படையில் செலுத்தப்பட்டது. ஒரு சில மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Top