logo
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ கவிழந்து விபத்து: 11 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ கவிழந்து விபத்து: 11 பேர் காயம்

23/Jul/2021 11:01:52

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ  வெள்ளிக்கிழமை கவிழ்ந்து   விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர்.

ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.களபம், ஆண்டிக்கோன்பட்டியைச் சேர்ந்த 10 பெண்கள், ஆலங்குடியைச் சேர்ந்த ராஜ்முகமது என்பவரின் சுமை ஆட்டோவில் குப்பகுடியில் உள்ள தேங்காய் நார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். மேலக்கோட்டை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை ஆட்டோ கவிழ்ந்தது. 

இவ்விபத்தில், ஆண்டிக்கோன்பட்டியைச் சேர்ந்த பிச்சையம்மாள்(75), எஸ்.களபத்தைச் சேர்ந்த மெய்யம்மாள்(65),வீரம்மாள்(45), சாந்தி(45), புஷ்பம்(45), முத்தழகு(52), பாக்கியம்(55),மல்லிகா(38),லெட்சுமி(30),கலா(30) ஓட்டுநர் ராஜ்முகமது(46) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அதில்,  பலத்த காயமடைந்த 9 பெண்கள் மேல்சிகிச்சைக்காக  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top