logo
 பெருந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர் தாக்கியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க கைக்குழந்தையுடன் பெண் வந்ததால் பரபரப்பு

பெருந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர் தாக்கியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க கைக்குழந்தையுடன் பெண் வந்ததால் பரபரப்பு

19/Jul/2021 11:31:41

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் குமரேசன்-தீபிகா தம்பதியர். குமரேசன் அதே பகுதியில் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தீபிகா திடீர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து தீபிகாவை வீட்டிலிருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் தீபிகாவுக்கு கொரோனா மற்றும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

 இதனையடுத்து பரிசோதனைக்கு சென்ற தீபிகாவை அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் உரிய பரிசோதனை செய்யாமல் அழைக்கழிக்க விடுவதாகக்கூறி தீபிகா கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செவிலியர் ஒருவர் தீபீகாவை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து தன்னை தாக்கிய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீபிகா தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.

  அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதை அடுத்து தீபிகா மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர். செவிலியர் மீது புகார் அளிக்க கைக்குழந்தையுடன்  வந்த பெண்ணால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Top