19/Jul/2021 03:53:35
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் அனைவரும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விதை கலாம் அமைப்பின் சார்பாக அதன் நிறுவனர் மலையப்பன் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்.
பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார். விழாவில், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், பேலஸ் சிட்டி ரோட்டரி நிருவாகிகள் பேராசிரியர் கருப்பையா, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
நிகழ்வில், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமசுந்தரி, கௌரி மற்றும் ஆசிரியர்கள் கமல்ராஜ், சுதா, கோகிலா, சிவகுமார், வீரமணி, ராஜா ஆகியோர் கலந்துகொண்டு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.