logo

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

19/Jul/2021 12:28:52

ஈரோடு, ஜூலை:ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2  நாட்களாக  சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும்  வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் நேற்று 3-ஆவது நாளாக  ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. 

 குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதைப்போல் அம்மாபேட்டை, கோபி, மொடக்குறிச்சி, பவானி, பவானி சாகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. பின்னர் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. பின்னர் இரவு முதல் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):

ஈரோடு - 15, சென்னிமலை - 8.6, தாளவாடி - 8, வரட்டுபள்ளம் - 6.4, அம்மாபேட்டை - 5.2, குண்டேரிபள்ளம் - 5, சத்தியமங்கலம் - 4, கோபி - 3.2, மொடக்குறிச்சி - 3, பவானிசாகர் - 1.8, பவானி - 1.8.

Top