logo
சத்தியமங்கலம் அருகே சாலையில் நடமாடும் காட்டெருமை, யானைகள் : வனத்துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம் அருகே சாலையில் நடமாடும் காட்டெருமை, யானைகள் : வனத்துறை எச்சரிக்கை

19/Jul/2021 11:44:59

ஈரோடு, ஜூலை: சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானை மற்றும் காட்டெருமைகள் சாலையோரம் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனத்தை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மழை பெய்து மலைப் பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. 


இந்த நிலையில், சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையான திம்பம் மலைப்பாதையின் முதலாவது கொண்டு ஊசி வளைவில் காட்டை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை மற்றும் காட்டெருமை நிற்கின்றன. மேலும் இந்த வனவிலங்குகள் சாலையோரம் உள்ள தீவனத்தை உட்கொண்டு  நடமாடிக் கொண்டு உள்ளன.

இதனை அவ்வழியாக செல்லும் வவாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து செல்கின்றனர். இவ்வாறு அடிக்கடி வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுவதால் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு  வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Top