11/Jul/2021 04:41:57
சென்னை, ஜூலை: தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் (11.7.2021) நடைபெற்ற நிகழ்வில், ஈரோடு தெற்கு மாவட்டம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.கிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வி.மணிமேகலை உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில்(11.7.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட அவைத்தலைவரும் சட்டமன்றக்குழு முன்னாள் தலைவருமான முன்னாள் எம்பி மற்றம் முன்னாள் எம்எல்ஏ நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் திமுக.வில் இணைந்தார்.
இந்நிகழ்வுகளில், திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுஎம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் எஸ்.முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.