10/Jul/2021 05:22:34
புதுக்கோட்டை, ஜூலை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மண் அடுப்பு, விறகு, விராட்டி உள்ளிட்டவைகளை பிரதமர் மோடிக்கு பார்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை தலைமை தபால்நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின்மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமை வகித்தார்.
இதில், பெட்ரோல் டீசல் விலை தினம் தோறும் விஷம் போல் ஏறி வருகிறது மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் கலால் வரியை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கையில் விறகு, மண் அடுப்பு மற்றும் விராட்டிகள் உள்ளிட்டவைகளை ஊர்வலமாக கையில் எடுத்து வந்துனர். மேலும் சிறிய சக்கரத்தில் கயிறு கட்டி சிறுவர்களை நிற்க வைத்து இழுத்து வந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் விறகு அடுப்பு, விறகுகள், விராட்டி உள்ளிட்டவைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக தலைமை தபால் நிலையத்திற்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.