logo
ஈரோட்டில் ஒரே நாளில் சமூக இடைவெளியை பின்பற்றாத 25 பேருக்கு அபராதம்: 49 வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில் ஒரே நாளில் சமூக இடைவெளியை பின்பற்றாத 25 பேருக்கு அபராதம்: 49 வாகனங்கள் பறிமுதல்

07/Jul/2021 11:42:14

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் சமூக இடைவெளியை பின்பற்றாத 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சசிமோகன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் முடுக்கிவிடப்பட்டு  ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விதிமுறைகளை மதிக்காமல் மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி  ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

 இதைப்போல் சமூக இடைவெளியை பின்பற்றாத 25 பேருக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது. 47 மோட்டார் சைக்கிள்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரே நாளில் விதிமுறைகளை மீறியவர்களிடம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Top