06/Jul/2021 01:19:58
புதுக்கோட்டை, ஜூலை: ஈரோட்டில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரஅடியில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை உலக சாதனைக்காக ஆய்வு செய்யப்படுகிறது
கொரொனா தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது அலையின் போது ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் என பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ரேட்டரி கிளப்புடன் இணைந்து 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டது. இதனிடையே ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கூட்டு முயற்சியால் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் ஒரு பிரம்மாண்டமான கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரோட்டரி சங்க நிர்வாகிகள் சகாதேவன், சிவபாலன் ஆகியோர் கூறியதாவது: ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது அமைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் 400 படுக்கைகள் கொண்ட நிரந்தர மருத்துவமனை ஒன்று உருவாக்கப்பட்டுவது இதுவே முதல் முறை என்பதால் ஆசிய அளவில் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாகவும் , மேலும் லி்ம்கா ரெக்கார்டு சாதனை புத்தக நிறுவனம் இந்த வாரம் மருந்துவமனையை நேரில் பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கொரோனா நோய்த்தொற்று காலத்திற்குப் பிறகு இந்த மருத்துவமனையில் அனைத்து வகையான நோயாளிக ளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் இந்த மருத்துவமனையை ரேட்டரி அமைப்பினர் பராமரிக்க மாவட்ட நிர்வாகத் திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.