21/Jun/2021 06:56:25
புதுக்கோட்டை, ஜூன்: தக்ஸ்னாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், கரிகாலன் கராத்தே, சிலம்ப கழகம் மற்றும் புதுக்கோட்டை ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கலை ஆசிரியர், வீட்டு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை ஜவஹர் சிறுவர் மன்ற அலுவலகத்தில் தக்ஸ்னாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், கரிகாலன் கராத்தே , சிலம்ப கழக தலைவர் ஜி.துரைராஜன் தலைமையில் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் பா.சாந்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், அரிமளம் இராமநாதன், தக்ஸனாஸ் மார்ஷியல் ஆர்ட்டஸ் நிறுவன செயலாளர் மாஸ்டர் எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.
இதில், தனியார் துறையில் பணிபுரியும்
கலை ஆசிரியர்கள் மற்றும் குரலிசை, மிருதங்கம்,
பரதநாட்டியம், வெஸ்டர்ன்
டான்ஸ், கீ போர்டு, ஒவியம், கராத்தே,
சிலம்பம், ஆகிய கலைகளில் பயிற்சியளிக்கும் மாஸ்டர்கள் மற்றும் வீட்டில்
வேலை செய்யும்பணியாளர் உள்பட 25 நபர்களுக்கு அரிசி மற்றும் 27 வகையான
மளிகைப் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வெளிநாட்டு வாழ் சிலம்ப பயிற்சியாளர் சார்பில் முதலமைச்சர் நிவாரண
நிதி ரூ.20,000 வழங்கல்
ஸ்வீடனில் பணிபுரியும் புதுக்கோட்டை கரிகாலச்சோழன்
அங்கு, சிலம்ப பயிற்சி முகாம் நடத்தியதன் மூலம் கிடைத்த தொகை
ரூ.20,000 ( ரூபாய்.இருபதாயிரம்) தமிழக முதல்வரின் கொரோனா
நிவாரண நிதிக்காக நன்கொடையாக அளித்துள்ளார் என்ற
தகவலை கராத்தே மாஸ்டர் பாலு தெரிவித்தார்.