logo
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

04/Jul/2021 02:14:38

புதுக்கோட்டை, ஜூலை: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் இருந்து இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி, மாலை போட்டு தள்ளுவண்டியில் ஏற்றி ஊர்வரலமாக வாலிபர் சங்கத்தினர் இழுத்துவந்தனர். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மோட்டார் வாகனங்களுக்கு இறுதி ஊர்வலம்தான் என்பதை உணர்த்தும் வகையில் தப்படித்தும், பாடை மேல் பூக்களைத் தூவியும் முழுக்கங்களை எழுப்பி வந்தனர்.

 ஊர்வலம் அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரத் தலைவர் டேவிட் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரச் செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் வினோத், N~க்முகமது, விவேகானந்தன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உரையாற்றினார்.

 ஆர்ப்பாட்டத்தில் வரலாறுகாணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Top