logo
புதுக்கோட்டை கீரனூரில் பெண்ணை காரை ஏற்றி கொலை செய்த 3 பேர் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறை

புதுக்கோட்டை கீரனூரில் பெண்ணை காரை ஏற்றி கொலை செய்த 3 பேர் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறை

04/Jul/2021 02:02:38

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம்  கீரனூரில் சொத்து பிரச்னைக்காக வயதான பெண் மீது காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் கைதான  3 பேர் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறை யிலடைக்கப்பட்டனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகத்தில் கடந்த 17.06.2021 அன்று  கீரனூர் பள்ளத்துப்பட்டி பிரிவு சாலையில் மது போதையில் சொத்து பிரச்னையின் . காரணமாக அதிவேகமாக காரை ஒட்டிச்சென்று  கீரனூர் அய்யப்பா நகரைச்சேர்ந்த பெ. பிச்சை மனைவி  கனகாம்பாள் (65) /பெ.பிச்சை என்பவரை கொலை செய்த  குற்றவாளிகள் பெ. சண்முகம் (39), கோவடிவேல் (37) , பா. ராஜேந்திரன் (35)  ஆகிய 3 பேர் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து அறந்தாங்கி சிறையில் அடைக்கப்பட்டனர்.


 கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் மீது மாவட்ட காவல் ண்காணிப்பாளர்  நிஷா பார்த்திபன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு ஆணையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மேற்படி சண்முகம், வடிவேல் மற்றும் ராஜேந்திரன் அறந்தாங்கி கிளைச் சிறையிலிருந்து   3.7.2021-ஆம் தேதி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Top