logo
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாத 611 பேருக்கு   ரூ.2.38 லட்சம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாத 611 பேருக்கு ரூ.2.38 லட்சம் அபராதம்

01/Jul/2021 10:07:29

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாத 611 பேருக்கு  ரூ..2.38 லட்சம் அபராதம்  விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 5 -ஆம் தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட  எஸ்பி-சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங் களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.அதுவும் கடந்த 28-ஆம் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வாகனங்கள் எண்ணிக்கை பெருகி விட்டது.

 37-வது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒரே நாளில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 611 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப் பட்டது.  வழக்கத்தைவிட முக கவசம் அணியாதவர்களுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 197 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 244 இருசக்கரவாகனங்களும், 7 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒருநாளில் மட்டும் ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இ -பாஸ் பதிவு பெற்று முறையாக அந்த வாகனங்கள் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. இதேபோல் ஹெல்மெட் அணியாதவர்க ளுக்கும் போலீசார் அபதாரம் விதித்து வருகின்றனர்.

Top