27/Jun/2021 11:21:04
புதுக்கோட்டை, ஜூன்: நலிவுற்ற பெண்களுக்கு விலையில்லாமல் தையல் இயந்திரம் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகளாக வருமானச் சான்று ரூ.72,000 -க்குள் வட்டாட்சியரிடம் பெற வேண்டும், இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும் அல்லது ரேசன் கார்டு), ஆறு மாத கால பயிற்சியில் பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று. வயது சான்று 20 முதல் 40 வரை அல்லது கல்வி சான்று அல்லது பிறப்புச்சான்று.
மேலும் சாதிச்சான்று, புகைப்படம் (Passport Size Photo) மனுதாரரின் 2 கலர் புகைப்படம். விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதறவற்ற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்காண சான்று நகல். ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 30.6.2021 -தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.