logo
ஈரோடு மாவட்டத்தில்  ஊரடங்கை மீறியதாக 219 வாகனங்கள் பறிமுதல்:ரூ.1.99 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 219 வாகனங்கள் பறிமுதல்:ரூ.1.99 லட்சம் அபராதம் விதிப்பு

22/Jun/2021 11:32:00

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஊரடங்கை மீறியதாக 219 வாகனங்கள் பறிமுதல்:ரூ.1.99 லட்சம் அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 28 -ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

28-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாமல் வந்த 217 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 246 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 211 இருசக்கரவாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று மட்டும் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சோதனை சாவடிகளில் -பதிவு இன்றி வரும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து வர வலியுறுத்தினர்.

Top