logo
அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

01/Oct/2020 11:58:36

ஈரோடு:உலக முதியோர் தினம் மற்றும் உலக ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக வியாழக்கிழமை  ஈரோடு மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் உள்ள டெலிபோன் பவன் முன்பு  ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் குப்புசாமி,  போக்குவரத்து துறை ஓய்வூதிய சங்க லோகநாதன், அகில இந்திய பிஎஸ்என்எல் டி ஓ சி மாநில உதவி செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ சலுகைகள் வழங்க வேண்டும். உள்நோயாளியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓய்வு தாரர்களுக்கு அதற்கான தொகையை வழங்க வேண்டும். ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் முழக்கமிட்டனர்.. 


Top