19/Jun/2021 04:11:38
ஈரோடு, ஜூன்: ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி பிறந்தநாள்(19.6.2021) சனிக்கிழமை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலும் ராகுல் காந்தி பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி, ஈரோடு பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸ் எம்.எல்.ஏ- திருமகன் ஈவெரா கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை வழங்கினார்.
இதைப் போல ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு, அரசு மருத்துவமனை ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், சிறுபான்மை பிரிவு துணை தலைவர் கே.என்.பாட்ஷா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.