17/Jun/2021 11:29:18
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வெள்ளிக்கிழமை (18.6.2021) காலை 11 மணிமுதல் 12.30 வரை நடத்தப்படும் மண் வள மேம்பாட்டில் சமச்சீர் உர பயன்பாடு என்ற இணைய வழி பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இது தொடர்பாக வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்ட தகவல்: இணைய வழியில் நடைபெறும் இப்பயிற்சியில் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை, சரியான விகிதத்தில், சரியான நேரத்தில், சரியான முறையில், சமச்சீராக வழங்குவது குறித்தும் பல தகவல்களை தெரிந்துகொள்ள விவசாயிகள் அனைவரும் பின் வரும் லிங்கை கிளிக் செய்து இணைய வழி பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் https://meet.google.com/hjm-yzbz-bzt
இந்நிகழ்ச்சியில்
மண் மாதிரிகள் சேகரிக்கும் முறைகள் மற்றும்
மண்வள அட்டையின் பயன்பாடு குறித்து உதவிப்
பேராசிரியர் (மண்ணியல் துறை) முனைவர் ஷெரின்
ஜெனிட்டா ராஜம்மாள், சமச்சீர் உரமிடுதல் அங்கக உரங்களின் பயன்பாடுகள் குறித்து முனைவர்
ஞா. பிரபு குமார் , குடுமியான்மலை சமிதி
இயக்குநர் பி .சங்கரலிங்கம், குடுமியான்மலை ஸ்டாமின்
(STAMIN) உதவி வேளாண் இயக்குனர் இப்ராம்ஷா ஆகியோர் உரைநிகழ்த்துகின்றனர்.
நேரம் காலை 11 மணி முதல்
12.30 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.