logo
தமிழகத்தில் என்பிஆர் நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்பி. உதயகுமார் அறிவிப்பு.

தமிழகத்தில் என்பிஆர் நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்பி. உதயகுமார் அறிவிப்பு.

12/Mar/2020 08:47:05

 

 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி தொடங்க இருந்த நிலையில் தமிழகத்தில் என்பிஆர்(தேசிய மக்கள்தொகை பதிவேடு)  கணக்கெடுப்பை நிறுத்திவைப்பதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மற்றும் என்.சி ஆர் (தேசிய குடிமக்கள் பதிவேடுஉள்ளிட்டவைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கேட்கப்படும் கேள்விகள் குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லையாம். அதனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் நிறுத்தி வைப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

 

Top