logo
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

13/Jun/2021 09:30:17

சென்னை, ஜூன் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய  கனமழை  வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: வடக்கு வங்கக்கடல் அதனையொட்டி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரை யொட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்.

இதன்காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்  கனமழை பெய்யும் எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய  திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள். 

மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகப்பட்டினம், கடலூர்,திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும்  வறண்ட  வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன்  லேசான  பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில்   அதிகபட்சமாக கோவை, சின்னக்கல்லார் 5 செமீ, தஞ்சை. அதிராமபட்டினம், நாகப்பட்டினம்வேதாரண்யம், கடலூர், பரங்கிப்பேட்டை தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

Top