logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 ஆண்டில் ஆதரவற்ற மனநலநோயாளிகள் 15 பேர் குடும்பத்தினரோடு சேர்த்து வைப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 ஆண்டில் ஆதரவற்ற மனநலநோயாளிகள் 15 பேர் குடும்பத்தினரோடு சேர்த்து வைப்பு.

12/Jun/2021 06:41:26

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில் ஆதரவற்ற மனநல நோயாளிகள் 15 பேர் குடும்பத்தினரோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

 ஆலங்குடி வட்டம் வேப்பங்குடி அருகே காயாம்பட்டி ஊராட்சி கல்லுப்பள்ளத்தில் 27 வயதுள்ள ஆதரவற்ற ஆண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிவதாக ஆலங்குடி வட்டாட்சியர் பொன்மலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையம் மூலம்  ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 இது குறித்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியது:

 புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக காவல், சுகாதாரம், வருவாய்த் துறையினரை உள்ளடக்கி வட்ட அளவில் மீட்பு குழு செயல்பட்டு வருகிறது.அதன்படி, ஆலங்குடி வட்டாட்சியர் பொன்மலர் அளித்த தகவலின் பேரில் கல்லுப்பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர், உடல் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பிறகு, மாவட்ட மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையத்துக்கு மாற்றப்படுவார்இம்மையத்தில் தற்போது 35 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மீட்கப்பட்டவர்களில் 15 பேர் அவர்களது குடும்பத்தினரோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்இவ்வாறு, மனநல பிரச்சினையினால் வீட்டை விட்டு பிரிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்தது அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  இத்தகைய செயலில், மாவட்ட மனநல திட்டத்தினர், வட்ட அளவிலான மீட்பு குழுவினரின் பங்கு அளப்பரியது என்றார்.

Top