logo
 தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசளித்து  போடாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய  புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியினர்

தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசளித்து போடாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியினர்

31/May/2021 09:51:50

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்கெனவே தடுப்பூசி போட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பொது இடத்தில் பொன்னாடை அணிவித்துமத்திய அரசின் தடுப்பூசி சான்றிதழையும்வீட்டு உபயோகப் பொருளையும் பரிசாக வழங்கி புதுக்கோட்டை மாவட்ட பாஜகவினர்.அசத்தி வருகின்றனர்

பாரதப் பிரதமராக  நரேந்திர மோடி  பதவியேற்று  மே-30 -ஆம் தேதியுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து, எட்டாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு,இந்தியா முழுவதும் சேவை தினம் கொண்டாடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில்  பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில்நகரப் பொது செயலாளர் லெட்சுமணன் முன்னிலையில் நடைபெற்ற  சேவை தினத்தை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சியில்ஏற்கெனவே கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக, கபசு சூர குடிநீர், குடிநீர் பாட்டில், பால், முட்டை, அரிசி, ரொட்டி  பாக்கெட்டுகள், ய்கறிகள்,பழங்கள், மாஸ்க்குகள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.

இதைத்தொர்ந்து அலங்கரிக்கப்பட்ட  கொரோனா விழிப்புணர்வு  வாகனம் மூலம் அக்கச்சியா குளம்தொண்டைமான் நகர், அடப்பன் வயல், சமத்துவபுரம், மச்சுவாடிபகுதிகளைச் சேர்ந்த 1400  பேருக்கும், 320 முன்கள பணியாளர்களுக்கும்  ஒரே நாளில்  தொகுப்பு பைகளை வழங்கி  தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.

 நிகழ்வுகளில் நகர பாஜக நிர்வாகிகள் தேவிகா, சத்யா,அகஸ்தியாசிங்காரம், முத்துலட்சுமி, ராஜகுமாரி, தர்மராஜ், ஜெயராமன்,சங்கீதா, லெட்சுமணராஜா மற்றும் வார்டு கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Top