28/May/2021 09:20:30
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை 04322 - 222989 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரங்கு காலங்களில் மக்களின் குறைகளை கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு பிரிவு கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும 04322-222989 என்ற தொலைபேசி எண்ணிற்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.