logo
அறந்தாங்கியில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கியில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

30/Sep/2020 12:45:17

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எல்பிஎப் மற்றும் சிஐடியூ விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து ஆர்ப்பாட்டம் நடந்தது முறையான பணி ஒதுக்கீடு செய்யவேண்டும் கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யக்கூடாது விடுமுறையின் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கத்தினை சேர்ந்த நிர்வாகிகள் யோகராஜ்,கோபாலன்,சிவக்குமார்,நெடுஞ்செழியன்,சுந்தரம்,ராமகிருஷ்ணன் செந்தமிழ்செல்வன்,பாலுக்கண்ணு மாணிக்கவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top