logo
ஊழலை அடிப்படை கொள்கையாகக் கொண்ட திராவிடக்கட்சிகளை அகற்றுவதே லட்சியம்: மக்கள் நீதி  மய்யம் கட்சி பொதுச்செயலர் எம். முருகானந்தம் பேட்டி

ஊழலை அடிப்படை கொள்கையாகக் கொண்ட திராவிடக்கட்சிகளை அகற்றுவதே லட்சியம்: மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலர் எம். முருகானந்தம் பேட்டி

30/Sep/2020 12:12:05

புதுக்கோட்டையில் பெரியார் நகரில் இன்று(செப்.30) நடைபெற்ற  மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய அலுவலகம் திறப்பு விழா திறன் மேம்பாட்டு பயிற்சி மையத் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும்  ஆகிய  முப்பெரும் விழாவில்  சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் எம்.முருகானந்தம்  கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி:

தமிழகத்தில் 45 ஆண்டு காலம் திமுக, அதிமுக கட்சிகள் மாற்று இல்லாத நிலையில்ஊழலை மட்டுமே மிக முக்கியமான அடிப்படையாக வைத்து நடைபெறும் ஆட்சியை அகற்றுவதே எங்களின் லட்சியம், கோரிக்கை. 2021-இல் வரும் சட்டப்பேரவை தேர்தல் தான் எங்கள் இலக்காக   நிர்ணயித்து பணிகளைத் தொடங்கியுள்ளோம்எந்த ஒரு சூழ்நிலையிலும், தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள் என்பது எங்கள் உறுதி மொழி. கூட்டணி வைப்பதற்கான கால அவகாசம்  இருக்கிறது. அதற்கான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று கட்சித்தலைவர் கமலஹாசன்  உரிய முடிவு எடுப்பார். டுவிட்டர்  பதிவில் அரசியல் கிடையாது. இன்று நவீன தொழில் நுட்பத்தை மக்களுக்காக பயன்படுத்துகிறோம். திராவிடத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. திராவிடம் பாதை மாறி  அக்கட்சிகளுக்கு ஊழல் மட்டுமே அடிப்படைக் கொள்கையாகிவிட்டதால் அவற்றை அகற்ற வேண்டும். அதற்கு மாற்றாக கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு போன்ற கொள்கைகளையும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் ஊழலற்ற ஆட்சியை கொடுப்பதை லட்சியமாகக்  கொண்டுள்ள நாங்கள் மாற்று என்பதை மக்களிடம் முன் வைக்கிறோம்மக்கள் நீதிமய்யம் மக்களிடம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் நீதிமய்யத்தின் கொள்கைகளையும்  கட்சியின் நிறுவனர் கமலஹாசனை முதல்வராக ஏற்றுக்கொள்பவர்களுடன்தான் கூட்டணி வைப்போம்.

ஒருநாள் விவசாயி, பல நாள் விவசாயி என பலரையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதே உண்மையான மக்கள் அரசின் பணி. அதைச்செய்யாமல் யார் முதல்வராக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற  வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து போராடும் என்றார் எம். முருகானந்தம்

இதையடுத்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் எம். முருகானந்தம். பங்கேற்று விவசாயிகள்,இசைக்கலைஞர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள்,வாடகைக்கார் ஓட்டுனர்கள், வாடகை வேன் ஓட்டுனர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் பேசுகையில், தற்போதைய கால சூழலில் நேர்மையும் உண்மையும் உள்ள ஒரே தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே என்றும், தமிழகத்திற்கான ஏற்றம்தரும் மாற்றத்தை அவரே தருவார் என்றும் கூறினார். இந்திய நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை காப்போம் என்றும் பேசினார். மக்கள் நலனை மட்டுமே அடிப்படை கொள்கையாக கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக மக்களாகிய நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்றார். 

விழாவுக்கு,  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ஆர். சரவணன் தலைமை வகித்தார்.    . திருச்சி மண்டல மாநில துணைச் செயலாளர் பொன்.கஜேந்திரன் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், விவசாய அணி செயலாளர் பொறுப்பு கார்த்திக் மெஸ் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் பிரிவு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.  விழா ஏற்பாடுகளை ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பாளர் ஜெய் பார்த்தீபன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர் மெஸ் சுந்தர், திருமயம் திருமேனி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

                 

Top