logo
திருச்சியில் நடந்த ஆய்வுக்கூட்டத்துக்கு சென்ற முதல்வருக்கு விராலிமலையில் வரவேற்பளித்த அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்

திருச்சியில் நடந்த ஆய்வுக்கூட்டத்துக்கு சென்ற முதல்வருக்கு விராலிமலையில் வரவேற்பளித்த அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்

21/May/2021 10:55:13

புதுக்கோட்டை, மே: கோவிட் தடுப்புப் பணி ஆய்வினை மேற்கொள்வதற்காக மதுரையில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இலஞ்சமேடு பகுதியில் முதல்வர் மு..ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள், திமுக நிர்வாகிகள் (21.05.2021) வெள்ளிக்கிழமை  வரவேற்பளித்தனர்.

  இதில், தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்.

வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, தென்னலூர் எம்.பழனியப்பன்  ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.

Top