logo
பிளஸ் -1 துணைத்தேர்வுகள் நாளை  தொடக்கம்

பிளஸ் -1 துணைத்தேர்வுகள் நாளை தொடக்கம்

28/Sep/2020 04:21:38

ஈரோடு:தமிழக அரசு உத்தரவின் பேரில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வு கடந்த  21-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், பிளஸ்-1  துணைத் தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஈரோட்டில் பிளஸ் 1 துணைத்தேர்வு எழுததேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுவோருக்கு 6 மையங்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோருக்கு 2 மையங்கள் என 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனஇந்தத் தேர்வு வரும் அக்டோபர் 5-ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் 8 -ஆம்  வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வும் நாளை முதல் தொடங்க உள்ளது இந்த தேர்வுக்காக ஈரோடு கருங்கல்பாளையம் ,ஈரோடு கார்மல் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தத் தேர்வு வரும் 7-ஆம்  தேதி நிறைவு பெறுமென பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.தேர்வுக்கான முன் ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்

Top