22/Apr/2021 06:27:27
ஈரோடு ஏப்: ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடுமயாகப் பரவி வருவதைத் தடுக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது மக்களுக்கு முக கவசம், கபசூர குடிநீர், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சு. முத்துசாமி தலைமையில் கொல்லம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,பகுதி செயலாளர் லட்சுமணகுமார், மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேசன் முன்னாள் யூனியன் சேர்மன் எல்லப்பாளையம் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.