logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 58,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன:  4200 கோவாச்சின்- 5800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 58,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: 4200 கோவாச்சின்- 5800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

20/Apr/2021 10:59:49

 புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 58,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  4,200 கோவாச்சின்- 5,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தெரிவித்துள்ளார்.

கோவிட் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில்  திங்கள்கிழமை நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்துக்கிப் பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: 

பொதுமக்கள் முகக்கவசம் இன்றி வெளியில் வரக் கூடாது எனவும், உணவகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், நேரக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல்,  காவல்துறையினா; மூலம் ஊரடங்கை கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க செய்தல் போன்றவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் சித்த மருத்துவப் பிரிவினை மீண்டும் திறப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏப்.20 -ஆம் தேதி நடைமுறைப் படுத்தப்படுகிறது. 

குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பணியாளர்கள் கையுறை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வழங்கவும், வாடிக்கையாளர்கள் நேரடியாக பொருட்களை எடுக்க அனுமதிக்க கூடாது எனவும் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நிறுவனங்களிலும் உள்ளே வரும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி திரவம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் மறுமுறை தவறாமல் முகக்கவசம் அணிவார்கள் என்பதனால் அபராத நடைமுறையை  தொடர்ந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 45 வயத்திற்கும் மேற்பட்டவர்களில் இதுவரை 11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 58,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்குத்  தேவையான 4,200 கோவாச்சின்- 5,800 கோவிஷீல்டு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. எனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை ஆகியவற்றிற்கு சென்று கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படு கிறது. 

வாக்கு எண்ணும் மையத்திலும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள்:

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளைக்  கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் அலுவலர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்கு எண்ணும் மையத்திற் குள் அனுமதி கிடையாது. நுழைவுசீட்டு இல்லாத எவ்வித வாகனங்களும் உள்ளே செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள சிசிடிவி  கண்காணிப்பு கேமரா ஒளிப ரப்பை பார்வையிடுவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியத் தின் மூலம் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வசதி உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய ஆயுதப்படை போலீஸார் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், வாக்கு எண்ணும் மையங்கள் தினமும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் காலை, மாலை 2 முறை ஆய்வு செய்யப்பட்டு அதன் விவரங்கள் அங்குள்ள பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு  வருகிறது.

 மாவட்ட ஆட்சியர் மூலமும் வாக்கு எண்ணும் மையம் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில்  தேர்தல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறையாக கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்,  இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) ராமு, பொது சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 


Top