logo
கொரோனா தடுப்பு மருந்துகள் போதிய அளவு வழங்க வேண்டும் : எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

கொரோனா தடுப்பு மருந்துகள் போதிய அளவு வழங்க வேண்டும் : எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

17/Apr/2021 10:00:54

ஈரோடு,ஏப்: பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்துகள் போதிய அளவு வழங்க வேண்டும் என எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் .மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம்  பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இது தொடர்பான கோரிக்கை  மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெருந்துறை மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பெருந்து றையில் இருந்து கோவை செல்லும் பிரதான சாலையானது 4.35 கோடிக்கு‌ ஒப்பந்தம் விடப் பட்டும் இதுவரை  சீரமைக்கப்படாமல்  இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் வர்த்தகர் களும்  மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

மேலும் இதுவரை சாலையில் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள்   நேரிட்டுள்ளன. அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு  சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் செப்பனிடவேண்டும்.பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்துகள் போதிய அளவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்  எனவும் தெரிவித்தார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்.

Top