27/Sep/2020 12:41:40
by p.raj-erode ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சி நாச்சிபாளையத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மற்றும் நம்பியூர் ஒன்றியத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.