26/Sep/2020 04:34:50
ஈரோடு: வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தன. குறிஞ்சி தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழக மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் சித்திக், தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் லுக்மானுல் ஹாக்கிம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர்.