19/Feb/2021 10:37:53
ஐபிஎல் சீசன் 2021- கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது.இதில் 292 வீரர்கள் ஏலம் விட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
அதற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. அடுத்தப்படியாக மேக்ஸ்வெல் ரூ.14.25 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் ஆர்சிபி அணியே வாங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவின் ஜய் ரிச்சர்ட்சன் ரூ. 14 கோடிக்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அதேபோல் ரிலே மெரிடித்தை ரூ.8 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கர்நாடகாவைச் சேர்ந்த கிருஷ்ணப்பாக கௌதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் இருவரும்தான் ஐபிஎல் போட்டிக்கு அதிக விலைக்கு ஏலம் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.