logo
சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது

சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது

18/Feb/2021 09:47:51

சென்னை:சென்னை சர்வதேச திரைப்பட விழா  2003-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த வருடம் பிப்ரவரி 18 முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் பங்குபெற உள்ளன

சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் சென்னையிலுள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரிஸ், செரின் அரங்குகள்) மற்றும் கேசினோ திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன தொடக்க விழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்  படமும், நிறைவு விழா திரைப்படமாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி  -ஆகிய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களும் கேன்ஸ் திரைப்பட விழா பெர்லின், ஈரான், வெனிஸ், ரோட்டர்டாம், பூசான் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற படங்களும் இடம்பெறுகின்றன. இந்த திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் பாஸ்வேர்டு, அக்கா குருவி உள்ளிட்ட 4 தமிழ்ப்படங்கள் இடம்பெறுகின்றன.

தமிழ்ப்படங்களுக்கால பாட்டியில் லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன். காட்ஃபாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சியான்கள், சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம், கன்னி மாடம் ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் தமிழ்ப் பிரிவில் 17 படங்கள் இடம் பெறுகின்றன.

சென்னை திரைப்பட விழாவில் வெற்றி பெறும் திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும், யூத் ஐகான் விருது உள்ளிட்ட சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும். திரைமற்றும் இலக்கிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளன. சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு  .75 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.


Top