17/Feb/2021 10:49:33
சென்னை: இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்: நடைபெற இருக்கும் 2021 ஆண்டு தமிழகம் மற்றும் .பாண்டிச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களிலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது.சீரமைப்போம் தமிழகத்தை புதியதோர் புதுவை செய்வோம் என இரு பெரும் கனவை நனவாக்க வேண்டிய சரித்திரம் மிக்க தருணமிது. நமது கட்சி நேர்மையாளர் களின் கூடாரம் திறமையாளர்களின் கோட்டை துணிச்சல் மிக்கவர்களின் பாசறை நாம் தான் தமிழகத்தின் பாதுாப்புப் படை .
தமிழகத்தின் 234
சட்டமன்ற தொகுதிகளுக்கும்,
புதுச்சேரியின் 10 சட்டமன்ற
தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி
தொகுதிக்கும தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கானப் பணிகளைத் துவங்கி விட்டோம் என்பதை
மகிழ்ச்சியுடன் உங்களுக்குத்
தெரியப்படுத்திக் கொள்கிறேன்
இந்தத் தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய முடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21-ஆம்
தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் தகுதியான வேட்பாளரைப் பரிந்துரைத்தும் விருப்ப மக்கள் அனுப்பலாம் என அதில் தெரிவித்துள்ளார்.