logo
வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

25/Sep/2020 11:29:36

விவசாயிகளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 24.09.2020 மாலை 7.07 மணிக்கு  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக அத்துறையின் தலைவர்  ஜெ.எம்.எச். ஹசன் மௌலானா அவர்கள் தலைமையில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது .

 இப்போராட்டத்த்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்  தினேஷ் குண்டு ராவ் எம்.எல்.ஏ., தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜெபி மேத்தர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சி.டி.மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் செய்லதலைவர்கள் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., மயூரா எஸ்.ஜெயக்குமார்,  மோகன் குமாரமங்கலம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.     


Top