03/Feb/2021 04:50:52
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை அரசுதொழிற்பயிற்சி நிலையத்தில்(ITI) வெல்டர் மற்றும் பிட்டர் ஆகிய பிரிவுகளில் தற்காலிக பயிற்றுநர் பணியிடத்திற்கு பின் வரும் தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:
பயிற்றுநர் (Welder) -1 பணியிடத்திற்கு தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் கல்வித் தகுதியுடன், பற்றவைப்பவர் துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கு ஒப்பந்த ஊதியம் ரூ.20,000 ஆகும்.
பயிற்றுநர் (Fitter) -2 பணியிடத்திற்கு தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் கல்வித் தகுதியுடன், பொருத்துநர் துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கு ஒப்பந்த ஊதியம் ரூ.20,000 ஆகும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி SC(A) 35, SC 35, ST 35, MBC 32, BC 32, OC 30, மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகளும், ஆதவற்ற விதவைகளுக்கு 5 ஆண்டுகளும் அவரவர் இனத்திற்கேற்ப வயது வரம்பில் சலுகை உண்டு. 1.7.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தலைவர், செயலாளர், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு அரசு தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை - 622 002 என்ற முகவரிக்கு வருகிற 10.02.2021 மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வி சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.
மேலும் நேர்முகத்தேர்வு நடைபெறும் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட பதவிக்கான நியமனத்தை தள்ளி வைக்கவோ அல்லது ரத்து செய்திடவோ நியமன அலுவலருக்கு அதிகாரம் உள்ளது.