logo
ரோட்டரி சங்கங்கள் சார்பில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: புதுக்கோட்டையில் தொடங்கியது.

ரோட்டரி சங்கங்கள் சார்பில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: புதுக்கோட்டையில் தொடங்கியது.

31/Jan/2021 11:48:52

புதுக்கோட்டை, ஜன: நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 புதுக்கோட்டை காமராஜ புரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும்  மற்றும்  அங்கன்வாடி மையங்களிலும் ,  பேலஸ்சிட்டி  ரோட்டரி சங்கம்  சார்பில் சங்கத் தலைவர்  டாக்டர் பி.தனசேகரன்  குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில்,மருத்துவர்  வெண்ணிலா, பேலஸ்சிட்டி  ரோட்டரி சங்கநிர்வாகிகள்.சங்க செயலாளர் வி.என்.எஸ் செந்தில் ரவி,கருணாகரன்,பாலாஜி, செவிலியர்கள் காவேரி ,பவுன்யா ,தர்ஷினிப்பிரியா, மது,ஹேமா நித்தியா பியூலா அங்கன்வாடி மைய பணியாளர்கள்  லலிதாதேவி,ஜெயந்தி,லெட்சுமி லில்லிஷ்  உட்பட பலர் பங்கேற்றனர்.


Top