logo
பயிர் பாதிப்பு அறிக்கைகளை ஜன.29-ஆம் தேதிக்குள் அளிக்க உத்தரவு: வேளாண் உற்பத்தி ஆணையர் தகவல்

பயிர் பாதிப்பு அறிக்கைகளை ஜன.29-ஆம் தேதிக்குள் அளிக்க உத்தரவு: வேளாண் உற்பத்தி ஆணையர் தகவல்

25/Jan/2021 06:05:30

பயிர் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி  29 -ஆஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் உற்பத்தி துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

தொடர் மழையால் பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இது தொடர்பாக வருவாய் துறையினர், வேளாண் துறையினர் தோட்டக்கலைத் துறையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். 


வாளமர்கோட்டை கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களைப் பார்வையிட்ட ககன்தீப்சிங் பேடி.

இதன் அறிக்கைகளை ஜனவரி 29 -ஆம் தேதிக்குள் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களிடம் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

 பயிர் அறுவடை சோதனைகளை விரைவாக முடித்து முன்கூட்டியே இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு  காப்பீட்டு நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ககன்தீப் சிங் பேடி.

இதனிடையே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் உலர்த்தும் இயந்திரத்தின் செயல்பாடுகளை ஆணையர் பார்வையிட்டார்.

Top