logo
பள்ளிகளைத் திறக்க  ஜனவரி முதல் வாரம் முழுவதும் பெற்றோர், மாணவர்களிடம் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

பள்ளிகளைத் திறக்க ஜனவரி முதல் வாரம் முழுவதும் பெற்றோர், மாணவர்களிடம் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

04/Jan/2021 01:49:11

ஈரோடு:  பள்ளிகள் திறக்க பெற்றோர், மாணவர்களிடம்  இந்த வாரம் இறுதி வரை கருத்துகள்  கேட்கப்படும். கூடுதலாக மாணவர்கள் வருகின்ற போது தான் கழிப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும் தற்போது குறைந்தளவு வகுப்பறைகள் திறக்க மட்டுமே முதல்வர் முடிவுகளை அறிவிப்பார். பள்ளி திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட குள்ளம்பாளையம் மற்றும் வேளண் கூட்டுறவு விற்பனை சங்கம் உட்பட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்ரூ.2500 வழங்கினார்.

அதனை தொடர்ந்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மக்கள் முதல்வர் என  எடப்பாடி பழனிசாமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற இருக்கிறது. பள்ளி திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடத்தபடும். செய்முறை தேர்வுகள் அனைத்தும் நடைபெறும்.

 அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். பள்ளிகள் திறக்க பெற்றோர், மாணவர்களிடம்  கருத்து கேட்பு இன்று முதல் தொடங்கி இந்த வாரம் இறுதி வரை நடைபெறும். ஜாட்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணி காலம் முடிவுற்றவர்களுக்கு பண தொகை வழங்காதது குறித்த கேள்விக்கு அனைத்துறை அலுவலர்களின் கருத்துகள் அறிந்து முதல்வர் முடிவெடுப்பார்.

20 சதவிகித அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது குறித்த கேள்விக்கு கூடுதலாக மாணவர்கள் வருகின்ற போது தான் பற்றாக்குறை ஏற்படும் தற்போது குறைந்தளவு வகுப்பறைகள் திறக்க மட்டுமே முதல்வர் முடிவு எடுப்பார். 

அனைத்து வகுப்பறைகளும் திறக்கும் போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு தேர்தல் வருகின்றபோது தான் தெரியும்.

பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். ஸ்டாலின் எப்பொழுதுமே வருங்கால முதல்வர் தான் என மு.க.அழகிரி வெளியிட்ட கருத்து குறித்த கேள்விக்கு  இதற்கெல்லாம்  நான் பதில் சொல்வதில்லை என்றார் செங்கோட்டையன்.


Top