logo
மே.4-ல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்- மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

மே.4-ல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்- மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

01/Jan/2021 08:23:41

புதுதில்லி: மே.4-ல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்- மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 2020-2021-ஆம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் முடிந்த அளவுக்கு கற்று வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று ஏற்கனவே கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

பொதுத் தேர்வுகள் மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், அதற்கான முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது..


Top