logo
நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன்  வழிப்பறி  செய்த  சிறார் உள்பட இருவர் கைது

நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் வழிப்பறி செய்த சிறார் உள்பட இருவர் கைது

18/Dec/2020 07:27:23

சென்னையில் சைக்கிளிங் சென்ற நடிகர் கௌதம் கார்த்திக்கை வழிமறித்து கீழே தள்ளி, செல்போனை பறித்து சென்ற சிறார் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கௌதம் கார்த்திக் தற்போது, புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்வது  கௌதம் கார்த்திக்கின் வாடிக்கை. வழக்கம் போல கடந்த 2 -ஆம் தேதி அதிகாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்

ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அவரை கும்பல் ஒன்று வழி மறித்துள்ளது. பின்னர், சைக்கிளில் இருந்து கௌதம் கார்த்திக்கை கீழே தள்ளி கையிலிருந்த சாம்சங் செல்போனைப் பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பி விட்டது. தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் 

இந்த நிலையில், வழிபறி கொள்ளையர்கள் கீழே தள்ளி தாக்கியதில் லேசான காயமடைந்த கௌதம் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினார். கௌதம் கார்த்திக்கிடம்  செல்போன் பறித்தவர்களை போலீஸார் தீவிரமாக தேடி கொண்டிருந்தனர் 

இந்த நிலையில் கௌவுதம் கார்த்திக்கிடம் செல்போனை பறித்து சென்ற மயிலாப்பூர் குயில் தோட்டத்தை சேர்ந்த சுகுமார் மற்றும் சரத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.ராயப்பேட்டையை சேர்ந்த பைரூஸ்கான் என்பவர் இவர்களிடத்தில் இருந்து செல்போனை வாங்கியதாக சொல்லப்படுகிறது.இதையடுத்து, பைரூஸ்கானையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

Top