logo
 வேப்பங்குடிகிராமத்தில் நிவர், புரெவி புயல் மழை.ால்  நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

வேப்பங்குடிகிராமத்தில் நிவர், புரெவி புயல் மழை.ால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

08/Dec/2020 09:27:40

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை அருகேயுள்ள வேப்பங்குடி கிராமத்தில் நிவர் மற்றும்  புரெவி புயலின்   போது தொடர்ந்து மழை  பெய்ததால் பல்வேறுபகுதிகளில் மழைநீர்  தேங்கியது. இதனால்  பாசன  நிலங்களில்  பயிரிடப்பட்டிருந்த நெற் பயிரில் தண்ணீர் சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது. 

பொற்பனைக்கோட்டைசேர்ந்த  பழனியப்பன் ,கண்ணனுக்கு சொந்தமான வயலில் அறுவடைக்கு தயாராக  இருந்த  சுமார் 3 ஏக்கர் நெற் பயிர்கள்களை தண்ணீரில்  மூழ்கியதால் நெற்கதிர்கள் அழுகி சேதமடைந்துள்ளது.  விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வடிந்தாலும், நெற்பயிர்கள் பிழைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

உடனடியாக சம்மந்தப்பட்டமாவட்ட  நிர்வாகத்தினர் பார்வையிட்டு  சேதங்களை மதிப்பிட்டு  நிவாரண உதவி கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்த மழையால் கண்மாய்களில் மழைநீர்  நிரம்பியுள்ளது பொதுமக்களை  மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.         


Top