logo
கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து விளம்பரத்திற்கு தடை: பதஞ்சலியிடம் விளக்கம் கேட்கும் மத்தி்ய அரசு

கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து விளம்பரத்திற்கு தடை: பதஞ்சலியிடம் விளக்கம் கேட்கும் மத்தி்ய அரசு

25/Jun/2020 10:01:49

 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக செய்து வரும் விளம்பரத்தை நிறுத்துமாறு யோகா குரு பாபா ராம்தேவ்க்கு மத்திய அரசு அறிவித்துள்ளது

யோகா குரு பாபா ராம்தேவ் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக செவ்வாயன்றுகரோனில் மற்றும் ஸ்வாசரிஎன்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் இந்த மருந்தின் விளம்பரங்களை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டதோடு , நிறுவனம் கோரியவெற்றிகரமான சோதனை மற்றும் சிகிச்சைஎன்பதற்கான விவரங்களையும் வெளியிட அறிவுறுத்தியுள்ளது.

 இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத கொரோனா சிகிச்சை குறித்த செய்திகளை கவனமேற்கொண்டதாகவும், நிறுவனம் மருந்தின் பலன்களுக்கு உரிமை கோரும் முடிவுகளும், தரவுகளும் அதன் விஞ்ஞான் அடிப்படையும் அமைச்சகத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மருந்தின் பெயர், உள்ளிடப்பட்ட மருந்துப் பொருட்களின் சேர்க்கை விவரம், எந்த மருத்துவமனையில் யார் யாரிடம் இந்த மருந்து சோதனை செய்யப்பட்டது, நடைமுறை, சாம்பிள் அளவு, நிறுவன அறவியல் கமிட்டி அனுமதி, கிளினிக்க சோதனை பதிவு விவரம், ஆய்வின் முடிவு தரவுகள் ஆகியவற்றைக் கேட்டுள்ளதோடு, முடிவுகள் தெளிவுபடுத்தப்படும் வரை இந்த மருந்துக்கான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும் ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பந்தப்பட்ட மருந்து உரிம ஆணையத்திடம் இதற்கான உரிமம் வழங்கிய நகல்கள், மருந்து அனுமதி ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.

Top